முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போலி ஐடி ரெய்டு.. பொள்ளாச்சியில் சினிமா பாணியில் ரூ.20 லட்சம் கொள்ளை - முக்கிய குற்றவாளி சரண்

போலி ஐடி ரெய்டு.. பொள்ளாச்சியில் சினிமா பாணியில் ரூ.20 லட்சம் கொள்ளை - முக்கிய குற்றவாளி சரண்

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

Pollachi : பொள்ளாச்சியில் 20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மேத்யூ (வயது 60) கோர்டில் சரண் அடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (வயது 53). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இவருடைய வீட்டிற்கு டிப்-டாப் உடையணிந்த 5 மர்ம ஆசாமிகள் காரில் வந்தனர்.பின்னர் அவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுக்கூறி அடையாள அட்டையை காண்பித்து வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து இதற்கு முக்கிய காரணமாக இருந்த  சதீஷ் (36)ஆனந்த் ,(47) ராமசாமி(47), தியாகராஜன் (42) பிரவீன்குமார் ( 36) மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கிணத்துக்கடவு போலீசார் முதல்கட்டமாக கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இதில் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரி வேடம்போட்டு சென்ற முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

Also Read: பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசம்.. சைக்கோ திருடனின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி

இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில்  இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவை ரத்தினபுரி சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த மேத்யூ (வயது 60) பொள்ளாச்சி  கோர்டில் சரண் அடைந்தார். கோர்ட்டில் சரணடைந்த  மேத்யூவை மாஜிஸ்திரேட் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான மேத்யூ கோர்ட்டில் சரண் அடைந்துள்ளதால் கிணத்துக்கடவு போலீசார் மேத்யூவை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Also Read: தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்

மேத்யூ-வை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்த பின்னர்தான் மற்ற தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரன் ,பைசல் ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து  தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

First published:

Tags: Arrest, Coimbatore, Crime News, Police, Pollachi