கோவையில் 19 மாதங்களுக்கு பின்னர் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி வந்த மாணவர்களை பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள், மலர்கள், பலூன்கள், பரிசுபொருட்கள் கொடுத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு மலர்கள், பலூன்கள், இனிப்புகள் கொடுத்து பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். கோவை மாவட்டத்தில் 2064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதால் அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் செய்து இருந்தன.
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பேண்ட் வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வகுப்புகளுக்குச் செல்லும் முன்பாக மாணவர்களுக்கு பரிசு பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் சளி, இருமல் போன்ற அறுகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
முதல் 15 நாட்களுக்கு ஆடல், பாடல், கதை சொல்லல் உள்ளிட்ட புத்தாக்கப் பயிற்சிகள் மட்டுமே நடத்தப்பட இருப்பதாகவும் அதன் பின்னரே வழக்கமான வகுப்புகள் துவங்கும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் குழந்தைகள், தங்களது நண்பர்களை பார்க்க முடிவதாகவும் ஆன்லைன் வகுப்புகளை விட நேரில் வகுப்புகளை கவனிப்பதுதான் தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
Must Read : School holiday | கன மழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விமுமுறை
நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் குழந்தைகள் உற்சாகத்துடன் வீட்டில் இருந்து கிளம்பியதாகவும், மாநகராட்சி பள்ளிகளிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அனைத்து பெற்றோர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டுமென பள்ளியின் சார்பில் அறிவுறுத்தப்பட்ட இருப்பதாகவும், பள்ளியிலும் செய்யப்பட்டுள்ள கொரொனா தடுப்பு முன்னேற்பாடுகளும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் குழந்தைகளின் பெற்றோர்களும் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.