கோவையில் தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஓட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த 2 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவையில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் பெரியாரின் சிலைகள் இருக்குமிடங்களில் எல்லாம் , சிலைகளுக்கு மலர் மாலைகள் சூடப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பெரியாரின் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ரவிக்குமார் என்ற இருவர் நகரின் பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியாரை விமர்சிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும், அனுமதியின்றியும் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். தந்தை பெரியாரை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறித்து காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகிய இருவரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
Also Read : ஆபாச பேச்சு: யூ-டியூபர் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸ்!
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ரவிக்குமார் என்பவர் மூலம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பொது சுவர்களில் போஸ்டர்களை ஒட்டிய ரவிக்குமார் என்ற நபரை அழைத்து விசாரித்த போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர். பாரத் சேனா அமைப்பை சேர்ந்த இருவரை மட்டும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore