கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையத்தில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளர்களாக ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்த சந்திர சேகர் பூவே, பிருந்தவன் பகார்த்தி என்ற இருவர் வேலை பார்த்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சுமை தூக்கும் பணியில் கடந்த 3 மாதங்களாக இருவரும் ஈடுபட்டு வந்தனர். குடிபோதையில் இருந்த இருவரும் ராக்கிபாளையம் பகுதியில் உள்ளஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரம் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த அவர்கள் இயந்திரத்தை உடைக்க முயன்றனர்.
இதனிடையே இயந்திரத்தை உடைக்க முயன்றதால் , எஸ்பிஐ வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு எச்சரிக்கை சென்றது. அவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவத்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் இருவரையும் பிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இருவரையும் அழைத்து வந்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பீடு செய்து பார்த்ததில் அவர்கள் இருவரும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளைசிறையில் அடைக்கப்பட்டனர்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.