கோவை வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த விவகாரத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவிடர் கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். தொடர்ந்து பெரியார் சிலை மீது காவி பொடி தூவியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள், மற்றும் திராவிடர் கழகத் தொண்டர்கள் அப்பகுதியில் ஒன்றுகூடினர்.
பின்னர் சிலை மீது செருப்பு மாலை மற்றும் காவி பொடி தூவிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை கண்டுபிடித்து விரைவாக கைது செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல பெரியார் சிலை அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியின் அடையாளத்தை காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் பெரியார் சிலை பின்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ஜெரால்டு ( கோவை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.