கோவை சிங்காநல்லூர் பகுதியில் பூட்டியிருந்த பொறியாளரின் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே ஒண்டிப்புதூர் ஜனதா நகர் பகுதியில் வசித்து வருபவர் சையது இப்ராகிம். பொறியாளாரான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு , மருத்துவ சிகச்சையில் இருந்த தனது உறவினரை பார்க்க குன்னூர் சென்றுள்ளார். பத்து நாட்களாக குன்னூரிலேய தங்கியிருந்த சையது இப்ராகிம் நேற்று இரவு கோவைக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 29 சவரன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறியாளர் வீட்டில் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.