முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் அதிகரிக்கும் கொரோனா: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு!

கோவையில் அதிகரிக்கும் கொரோனா: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு!

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் மாநகராட்சியில் உள்ள நெருக்கடிப் பகுதிகளில் இருந்து தான் தொற்று பாதிப்பு உறுதியாவதால்,  தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதாக என்பதை கண்டறியும் பணியில்  3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் மாநகராட்சியில் உள்ள நெருக்கடிப் பகுதிகளில் இருந்து தான் தொற்று பாதிப்பு உறுதியாவதால்,  தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதாக என்பதை கண்டறியும் பணியில்  3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் மாநகராட்சியில் உள்ள நெருக்கடிப் பகுதிகளில் இருந்து தான் தொற்று பாதிப்பு உறுதியாவதால்,  தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதாக என்பதை கண்டறியும் பணியில்  3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானசி சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

    தமிழகத்தில் சென்னை தவிர கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து, சென்னை பாதிப்பை விட உச்சம் தொட்டது. இதனால், கோவையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 70 சதவீதம் மாநகராட்சியில் உள்ள நெருக்கடிப் பகுதிகளில் இருந்து தான் தொற்று பாதிப்பு உறுதியாவதால்,  தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

    வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதாக என்பதை கண்டறியும் பணியில்  3 ஆயிரம் பணியாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 100 வீடுகளுக்கு ஒருவர் என சோதனை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவத்துள்ளார்.  மேலும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

    கோவையில் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இருப்பினும், நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் வழிமுறைகளை, பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும்  அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையில், கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, அந்த மாவட்டத்தை சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் ஆட்சியர் நாகராஜிடம் மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 9 அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஒன்றாக சென்று மனு அளித்தனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுதினார்.

    மேலும், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும்அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: ADMK, Coimbatore, Corona