கோவை தேவாலயத்தில் சிலையை உடைத்த விவகாரம்.. இந்து முன்னணி நிர்வாகி கைது
கோவை தேவாலயத்தில் சிலையை உடைத்த விவகாரம்.. இந்து முன்னணி நிர்வாகி கைது
இந்து முன்னணி நிர்வாகி கைது
Coimbatore : கோவை டிரினிட்டி தேவாலயத்தில் செபஸ்தியர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை இந்து முன்னணி அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவைராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த தீபக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலை கடந்த 23 ம் தேதி நள்ளிரவில் சேதப்படுத்தபட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணக நடத்திய நிலையில் , தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்திற்கு எதிர்வினையாற்ற இந்து முன்னணி அமைப்பினர் கோவை தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இராமநாதபுரம் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த தீபக், மதன்குமார், மூர்த்தி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் தேவாலயத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரை நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிலையை சேதப்படுத்திய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தீபக் என்பவரை நேற்றிரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தீபக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அந்த அமைப்பை சேர்ந்த மூர்த்தி என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.