கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் மருத்துவமனையில் பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினர் அப்பள்ளியின் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர், மூன்று பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
Also Read: உண்டியல் சேமிப்பில் இலவச மாஸ்க்.. சிறுவனுக்கு குவியும் பாராட்டு
இதில் ஆலாந்துறையை சேரந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமார் மட்டும் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் குத்தியதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பள்ளியில் படித்த 17 வயது முன்னாள் மாணவர் உட்பட மூன்றுபேரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ந்தனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Government school, School students