கோவையில் தனியார் ஆசிரம உரிமையாளரை ரூ.1.10 கோடி கேட்டு, சுப்பாக்கி முனையில் கடந்தி,ரூ.35 லட்சம் பணத்தை பெற்று தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஈரோடு மாவட்டத்தில் புலிப்பாணி சித்தர் மடம் வைத்து நடத்தி வருகிறார். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கோவை வரும் அவர் கடந்த 7 ஆம் தேதி வழக்கம்போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் 8 ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் தாங்களை பேரூர் போலீசார் என்றும் விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.’
அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த சரவணன் அவர்களிடம் அடையாள அட்டை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரவணனை வேனுக்குள் இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை வேனில் கடத்தி கொண்டு பழனியில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை வைத்து மிரட்டி அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சரவணனை கொலை செய்து உடலை மட்டும் அனுப்பி வைப்போம் என மிரட்டியுள்ளனர்.
அதிரச்சியடைந்த அவரது மனைவி ரூ.35 லட்சம் பணத்தை தயார் செய்துள்ளார். இதையடுத்து பணத்தை சேலம் மாவட்டம் திருச்சங்கோடு மணல்மேட்டில் வைத்து பணத்தை பெற்ற மர்ம கும்பல், அதன் பிறகு பழனியில் இருந்த சரவணனை விடுவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சரவணன் கோவை பேரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் அவரை கடத்திச் சென்ற மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவரது மடத்திலோ, நிறுவனத்திலோ வேலை செய்வோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: சுரேஷ் (கோயம்புத்தூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.