தனது எண்ணில் இருந்து, தனது குரலில் தன்னிடமே பேசிய நபர் - ஷாக் ஆன சரத்குமார் போலீசில் புகார்
தனது எண்ணில் இருந்து, தனது குரலில் தன்னிடமே பேசிய நபர் - ஷாக் ஆன சரத்குமார் போலீசில் புகார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமாருக்கு கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் பெயரில் மென்பொருள் உதவியுடன் பேசிய போலி நபர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சரத்குமார் தொலைபேசி நம்பரிலிருந்தே பேசுவது போல் பிற பிரபலங்களுக்கு ஒரு நபர் அடிக்கடி பேசி வந்துள்ளார். அதுவும் சரத்குமார் குரலிலேயே மென்பொருள் உதவியுடன் பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து சரத்குமாரிடமும் அந்த நபர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டிருக்கிறார்.
தனது நம்பரிலிருந்து தமக்கே அழைப்பு வந்ததால் அதிர்ந்து போன சரத்குமார், அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதில் அந்த நபர் தான் கோவையை சேர்ந்தவர் என்றும், தனது நம்பரில் இருந்து அழைத்த போது போனை எடுக்காததால், இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்த சரத்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.