முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive : 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி அமையும் என நம்புகிறேன் - நியூஸ்18 கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Exclusive : 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி அமையும் என நம்புகிறேன் - நியூஸ்18 கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஒரு காலம் இருந்தது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

  • Last Updated :
  • Chennai, India

சிஎன்என் நியூஸ் 18 சார்பில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் ‘தி டவுன் ஹால்’ கருத்தரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

‘தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி பங்கேற்றார். அதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,ம் வகுப்புவாரி பிரநிதித்துவம், பெண்களுக்கு வாக்கு உரிமை, மொழிவாரி மாநிலம் பிரிப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை, சத்துணவு திட்டம் போன்ற முன்னோடி சிந்தனைகள் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் முதல் சட்ட திருத்தம் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தால் தான் கொண்டு வரப்பட்டது என அப்போதைய பிரதமர் நேரு அவர்களே தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பெற்று தருவதே சமூகநீதியின் முதன்மையான குறிக்கோள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு காலம் இருந்தது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நிலையான வளர்ச்சி, தனி நபர் வருமானம், பணவீக்கம் குறைவு, பட்டினி சாவு இல்லா மாநிலம், தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் என பல குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது” என தெரிவித்தார்.

மேலும் “ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்கள் ஏற்றத்தை கணக்கிடுவது திராவிட மாடல். அனைத்து மாநிலங்களுக்கு திராவிட மாடல் சிந்தனை பரவ வேண்டும்” எனவும் தெரிவித்தார். 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல்  வருமா என்ற கேள்விக்கு, ‘ வரும் என்ற நம்பிக்கையில்தான் பணியாற்றி வருகிறோம்’ என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

First published:

Tags: CM MK Stalin, News18