முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக பணியாற்றுகிறார்: தாமோ அன்பரசன்

முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக பணியாற்றுகிறார்: தாமோ அன்பரசன்

தாமோ அன்பரசன்

தாமோ அன்பரசன்

கிராமப் புறங்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்த வில்லையோ அவர்களை கண்டறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் வீட்டுக்கே சென்று தடுப்பூசி முழுமையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணியே லட்சியம் என செயலாற்றி வருவதாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஒமைக்கிரான் (Omicron) பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் இன்று முதல் 15 லிருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிகள் இன்று முதல் குறிப்பிட்ட இந்த வயதினருக்கு செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் துவங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: புதிய வைரஸ் தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 87 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 57 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஒரு சிலர் இன்னும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்தி கொண்டால் கொரோனாநோய்த் தொற்று ஏற்பட்டாலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். கிராமப்

புறங்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்த வில்லையோ அவர்களை கண்டறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் வீட்டுக்கே சென்று தடுப்பூசி முழுமையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் : ஈஸ்வரன் கோரிக்கை

திமுக ஆட்சி பொறுப்பேற்று தற்போது வரை தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 25 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி செயல்படுத்தி உள்ளது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணியே லட்சியம் என செயலாற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்

First published:

Tags: Corona Vaccine, DMK, MK Stalin