முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த 3 திட்டங்கள்தான் என்னுடைய வரலாற்றில் பதிவாகியிருப்பதாக நினைக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த 3 திட்டங்கள்தான் என்னுடைய வரலாற்றில் பதிவாகியிருப்பதாக நினைக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலாவதாக, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவித்ததுதான். இதன் மூலம் பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாவதாக கருதுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுகொண்ட பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்துள்ள இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல், திராவிட மாடல்,  2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.

இந்த 15 மாத ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் உங்களுக்கு முதன்மையாக கருதப்படும் திட்டம் அல்லது மன நிறைவு அளித்த திட்டங்கள் எவை என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 திட்டங்களை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்தார்.

அதில் முதலாவதாக, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவித்ததுதான். இதன் மூலம் பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாவதாக கருதுகின்றனர். இதனால், பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவானதால், புரட்சி அளிக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது. பெண்கள் அதிமகாக இந்த திட்டத்தை வரவேற்பதால், இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

இரண்டாவதாக கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். அரசு பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் என திராவிட மாடல் ஆட்சி இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் மாணவிகள் அதிகளவில் மேற்படிப்பை நோக்கி செல்வார்கள்.

ALSO READ | இதுதான் திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மூன்றாவதாக அண்மையில் மதுரையில் தொடங்கப்பட்ட காலை சத்துணவு திட்டம்தான். ஏற்கனவே நூற்றாண்டுகளுக்கு முன்பு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சிறிது காலத்தில் நிறுத்தப்பட்டது. பிறகு தலைவர் காமராஜரால் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை கையிலெடுத்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் முட்டை, வாழைப்பழம் என பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்து செயல்படுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நான் காலை சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

top videos

    ஆகவே இந்த  மூன்று திட்டங்கள்தான் எனது வரலாற்றில் பதிவாகியிருப்பதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, MK Stalin, News18 tamilnadu