இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. (1/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 9, 2021
உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை
அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும்
கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என
தெரிவித்துள்ளார்.