முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கை கொடுத்த அண்ணாமலை.. ஆளுநர் தேநீர் விருந்தில் சுவாரஸ்யம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கை கொடுத்த அண்ணாமலை.. ஆளுநர் தேநீர் விருந்தில் சுவாரஸ்யம்

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு கை கொடுத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், சட்டமன்றத்தில் உரையை மாற்றி படித்தது மற்றும் பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இதனைதொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளாக சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகியவையும் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற இந்த விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை , ஜிகே வாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். முதலமைச்சரும் கவர்னரும் அரங்கிற்குள் நுழையும் போது அனைவரும் அவர்களை எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வரிசையில் நின்ற அனைவருக்கும் கை கொடுத்தார். அந்த வகையில் அங்கு நின்றுக்கொண்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுத்தார். இந்த சம்பவம் தேநீர் விருந்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Annamalai, CM MK Stalin, RN Ravi