முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பங்கேற்பு!

ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பங்கேற்பு!

தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், சட்டமன்றத்தில் உரையை மாற்றி படித்தது மற்றும் பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். அதனை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளாகிய கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தார்.

இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இதனை தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற இந்த விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

First published:

Tags: CM MK Stalin, Governor, RN Ravi