முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துப்பாக்கி சூட்டில் ஒடிசா அமைச்சர் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

துப்பாக்கி சூட்டில் ஒடிசா அமைச்சர் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

முதலமைச்சர் ஸ்டாலின், நபா தாஸ்

முதலமைச்சர் ஸ்டாலின், நபா தாஸ்

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளவர் நபா கிசோர் தாஸ். இவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, காரில் இருந்து இறங்கிய நபா கிசோர் தாஸை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ், 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில், 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிசோர் தாஸ் நிலை குலைந்து சரிந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, ஜார்சுகுடா விமான நிலையத்தில் இருந்து வான் வழியாக புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிகாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை சுட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு மனநல கோளாறு இருப்பதாக நபா தாஸின் மனைவி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

.

First published:

Tags: CM MK Stalin, Gun shot, Odisha