ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்தவது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளட்ட 7 பேரை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் 2018ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி. அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளவனும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சனிக்கிழமைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார்; அமைச்சர் ஜெயக்குமார் தகவல்https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/20JwRXcVu1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 29, 2021
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலையில் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi palanisamy