டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பாக தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களான தீரன் சின்னமலை, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வேலு நாச்சியார், போன்றவர்களின் திருஉருவம் தாங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் மத்திய பாஜக அரசு தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்தது. இது தமிழகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர் நடவடிக்கையாக சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதை தொடர்ந்து அலங்கார ஊர்தி தமிழகம் முழுக்க 23 நாட்களில் 2,100 கிலோ மீட்டர் பயணம் செய்தது. தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
தமிழகம் முழுக்க அணிவகுப்பு முடிவடைந்து சென்னை வந்தடைந்த அலங்கார ஊர்திகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். மேலும் அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகத் தாய்மொழித் தினம்: தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன பல்கலைக்கழக மாணவர்கள்!
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதுகுறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.