சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். 46வது சென்னை புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் பபாசி அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பபாசி நிர்வாகிகள், புத்தக கண்காட்சிக்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 800க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும் சிறந்த பதிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் முதன்முறையாக 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சி, 3 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டனர். புத்தக கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும், இந்த வருடம் திருநங்கைகளுக்கு ஒரு அரங்கை தர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர்கள் விவரித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai book fair, CM MK Stalin