ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகள் வாங்குவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளபட்டதால் நீர்வரத்து கால்வாய்களில் அடைப்புகள் இல்லாமல் கண்மாய்கள், குளங்கள் 100 சதவீதம் நிரம்பி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சுஜித் மரணம் குறித்து கேட்ட போது “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், மீறுவோருக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகள் வாங்க முதல்வர் ஆலோசனை – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்@Kadamburrajuofl
Click: https://t.co/57Vqhnh10C pic.twitter.com/Pg3DCQ7wf5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 30, 2019
பார்க்க :
மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Borewell Hole