தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல சென்னையிலிருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் 13-ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் தொடர்ந்து சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,247 பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15-ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 16026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளித் திருநாளினை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூட் செல்லும் பயணிகள் எளிதாக பயணிகும் வகையில் நாளை முதல் 13-ஆம் தேதி வரை வெளியூர் செல்லும் பேருந்துகள் பின்வரும் 5 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்குன்றம் வழியாக கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மார்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மார்கமாக செல்லும் பேருந்துகள் கே,.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் , விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம் தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அன்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், ஓசூர், தருமபுரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன.
தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நெய்வேலி, சிதம்பரம், வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கும், திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Also read... Gold Rate | சவரனுக்கு ₹ 1,248 குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
பேருந்துகளை முன்பதிவு செய்ய கேயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் MEPZ பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையம் என மொத்தம் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளை முன்பதிவு செய்ய www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக 94450 14450, 94450 14436 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.