முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Chennai Food Festival : பராம்பரிய உணவு வகைகளின் சங்கமம்... சென்னை தீவுத்திடலில் நாளை தொடங்கும் உணவு திருவிழா

Chennai Food Festival : பராம்பரிய உணவு வகைகளின் சங்கமம்... சென்னை தீவுத்திடலில் நாளை தொடங்கும் உணவு திருவிழா

food fest

food fest

சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022’ கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருக்கும். திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

  • Last Updated :

சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழாவை நடத்தத் தயாராகி வருகிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெறவுள்ளது.

ஈட் ரைட் இந்தியா என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒரு முன்முயற்சியாகும். இது இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஊட்டச்சத்துப் போக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, ‘சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022’ கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருக்கும். இவ்விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். உணவுத் திருவிழா மகளிர் சுயஉதவி குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும். உணவுத் திருவிழா மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ் குமார், இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டும், ஆனால் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இப்போது நடத்தப்படுகிறது என்றார்.

கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள், வண்ண உயிரினங்களை ரசிக்க ஆர்வமா.. இந்தியாவின் சிறந்த இடங்கள் இதோ

“நாங்கள் 2019 இல் மதராசப்பட்டினம் உணவுத் திருவிழா என்ற தலைப்பில் இதேபோன்ற உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த திருவிழாவில் 90 சதவீத பொருட்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளாகவே இருக்கும். இது ஒரு உணவு கண்காட்சி போல இருக்கும். மாவட்டங்கள் தோறும் உணவுத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இம்முறை சுமார் 150 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களுக்காக சுமார் 10 ஸ்டால்கள் வைக்க திட்டமிட்டுள்ளோம். பல முக்கிய பிரமுகர்கள் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார்கள், ”என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த குமார் கூறினார்.

திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவார்கள். பார்வையாளர்களுக்கு நுழைவு ஏதுமில்லை. திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா உட்பட அனைத்து பிரபலமான உணவகங்களும் உணவுத் திருவிழாவில் தங்கள் ஸ்டால்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரி குறிப்பிட்டார்.

First published:

Tags: Chennai, Food Festival 2022, Fssai