முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தலைமை செயலகம்: மரம் வேரோடு சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி!

தலைமை செயலகம்: மரம் வேரோடு சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி!

காவலர் கவிதா

காவலர் கவிதா

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில்,  N3 முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் கவிதா என்பவர் உடல் நசுங்கிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா என்பவர் உயிரிழந்தார். மற்றொரு காவலர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. சென்னையின் ஒரு சில பகுதிகளில்  நேற்று இரவு முதல்  விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகில் உள்ள   தூங்குமூஞ்சி மரம்  இன்று காலை  வேரோடு சரிந்து விழுந்தது.

மரம் சரிந்து விழுந்ததில்,  N3 முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் ( எண்: HC 27681) கவிதா என்பவர் உடல் நசுங்கிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த N1 ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் என்பவர் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.  தொண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். 23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் மீதும் மரத்தின் கிளைகள் சரிந்து விழுந்ததில் அவருக்கும் தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக காவலர் முருகனை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பழமையான மரம் ஒன்று விழுந்து அதில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கனமழை எதிரொலி.. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

First published:

Tags: New Secretariat, TN Police