மதுராந்தகம் ஏரியில் ஆபத்தை உணராமல், குழந்தைகளையும் அழைத்துவந்து செல்ஃபி எடுக்கும் மக்கள் கூட்டம்..
மதுராந்தகம் ஏரியில் ஆபத்தை உணராமல், குழந்தைகளையும் அழைத்துவந்து செல்ஃபி எடுக்கும் மக்கள் கூட்டம்..
மதுராந்தகம் ஏரியில் ஆபத்தை உணராமல், குழந்தைகளையும் அழைத்துவந்து செல்ஃபி எடுக்கும் மக்கள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வரும் நிலையில் ஆபத்தை அறியாமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்பி எடுத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி, அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி. தற்போதைய நிவர் புயல் வீசிய காரணமாக தொடர் மழை பெய்தது. அதனால் ஏரி முழு கொள்ளளவை இன்னும் ஓரிரு தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2411 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி 654 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கப்படும் கொள்ளளவு உடையது. இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் 20 கனஅடி தண்ணீர் எட்டி உள்ளது.
ஏரியின் நீர் வரத்து 654கனஅடி கொள்ளளவில் தற்போது 448 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு முழு கொள்ளளவை தொட்ட நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிக்கு தற்போது சுமார் 1500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த ஏரியை பார்க்க பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக வந்து ஆபத்தை அறியாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டு ஏரியை பார்வையிடுகின்றனர். உடனடியாக பொதுப்பணித்துறையினர் ஏரியில் முகாமிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல கொசஸ்தலை ஆற்றில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்து விளையாடி மகிழ்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.