சென்னையில் நாளை மறுநாள் (10.03.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “சென்னையில் 10.03.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எண்ணூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூரில் மின்தடை பகுதிகள் : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் வரும் 10ம் தேதி மின்தடை ஏற்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut