கடந்த 14ம் தேதி சென்னை பிராட்வே அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் கிடந்தது. அந்தக் குழந்தை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது.
குறைமாதத்தில் பிறந்த அந்த குழந்தை 1.6 கிலோ எடையுடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு அரசு தாய்ப்பால் வங்கி உதவியுடன் தாய்ப்பால் அளிக்கப்பட்டு வந்தது.
இதன் விளைவால் குழந்தை 400 கிராம் எடை அதிகரித்து 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரஜோ ஆகியோர் குழந்தையை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது குழந்தையை கையில் தூக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் முத்தமிழ்ச் செல்வன் எனப் பெயர் சூட்டினார். பின்னர் குழந்தை முத்தமிழ்ச் செல்வனை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை வழங்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி மிகப் பெரிய பயன் அளித்திருப்பதாகவும், வருங்காலங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தாய்ப்பால் வங்கி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Also read: சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா - கிண்டி கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை
மேலும் கூறுகையில், குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெற்றோர்களைக் கண்டுபிடித்தால் உரிய விதிமுறைகளின்படி பெற்றோர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.
இது போன்று குழந்தைகளைக் குப்பைத் தொட்டியில் போடும் சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். இது தொடர்பாக சமூகநலத் துறை சார்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 68,421 குழந்தைகள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளிலும் கூட தாய்ப்பால் வங்கி கிடையாது என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறியது, தமிழகத்தில் 1,200 குழந்தை நல மையங்கள் உள்ளன. இதில் 152 மையங்கள் அரசு உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர 1,100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன. ஒரு குழந்தைக்கு மாதம் 2,160 ரூபாய் செலவுக்காகக் கொடுக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக அரசு 42 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.