முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive: ஸ்வாதி கொலைக்குப் பின்னும் மாறாத கதை! ரயில் நிலையங்களில் சிசிடிவி என்னாச்சு? ரயில்வே விளக்கம்!

Exclusive: ஸ்வாதி கொலைக்குப் பின்னும் மாறாத கதை! ரயில் நிலையங்களில் சிசிடிவி என்னாச்சு? ரயில்வே விளக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கள ஆய்வு மேற்கொண்டு செய்தி ஒளிபரப்பியது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை மற்றும் புறநகர் ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது முடிக்கப்படும் என்றும் நியூஸ் 18 செய்தி எதிரொலியாக தெற்கு ரயில்வேவின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்  ஸ்வாதி என்ற பெண் 2016ம் ஆண்டு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அதிகம் கவனிக்கப்பட்டது ரயில் நிலையம் என்பதுவே. பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பதும், முக்கிய ரயில்நிலையத்தில் சிசிடிவி இல்லை என்பதும் பெரும் பேசுபொருளானது.

' isDesktop="true" id="820053" youtubeid="RflYF_KU664" category="tamil-nadu">

அதன்பின்னர் இந்த சிசிடிவி பிரச்னை நீதிமன்றம் படியும் ஏறியது. இது ஒருபுறமிருக்க அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கள ஆய்வு மேற்கொண்டு செய்தி ஒளிபரப்பியது.

நியூஸ் 18 செய்தி எதிரோலியாக தெற்கு ரயில்வே அளித்துள்ள பதில்

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உத்தரவு.. 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருவார்கள்'' - அண்ணாமலை பேச்சு

top videos

    இதையடுத்து நமது செய்தியை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ள சென்னை கோட்ட மேலாளர், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சிசிடிவிக்கள் பொருத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    First published:

    Tags: CCTV, News18 Tamil Nadu, Southern railway