முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? - ஓ.பி.எஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? - ஓ.பி.எஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

இபிஎஸ், ஓ.பி.எஸ்

இபிஎஸ், ஓ.பி.எஸ்

அ.தி.மு.கவிலுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் பதவி குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு  சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ’ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை  உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக கூறினார்.

“கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்..”- பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்..!

 மேலும், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய  அனுமதி அளித்து,  விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam