வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைச் செயலர் சண்முகம் எச்சரிக்கை..
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைச் செயலர் சண்முகம் எச்சரிக்கை..
தலைமைச் செயலாளர் சண்முகம்
நவம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரித்துள்ளார்.
சில மத்திய வர்த்தக சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26-ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளன. அந்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டம் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் பணிகளை தடுக்கும் விதமாக ஊழியர்கள் நடந்து கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். நவம்பர் 26-ஆம் தேதி பணிக்கு வராத ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் போராட்டத்தில் பங்கேற்றால் பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் மருத்துவ விடுப்பை தவிர, தற்காலிக விடுப்பு உட்பட எந்த விடுப்புக்கும் அனுமதி இல்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.