போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, சென்னையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உட்பட 11 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள. இதனால் சென்னையில் தினமும் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உட்பட 11 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.