முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

TN Assembly | பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் - பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை - அமைச்சர் பொன்முடி

  • Last Updated :

வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் சட்டபேரவை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1,28,000 இடம் நிரம்பியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருப்பதாகவும், வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More : தற்கொலையை தடுத்த தமிழக அரசின் இலவச பேருந்து திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்

மேலும், பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் - பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும், சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.

First published:

Tags: Engineering, Engineering counselling, Minister Ponmudi, Tamil News, Tamilnadu, TN Assembly