இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது - டி.ராஜா
இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது - டி.ராஜா
தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு
மே தினம் மற்றும் சிங்காரவேலர் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டி தோழர் நல்லக்கண்ணு செங்கொடி ஏற்றி சிறப்பித்தார்.
இந்தியை எப்படியாவது திணித்துவிடத் துடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
மே தினம் மற்றும் சிங்காரவேலர் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு , மாநில செயலாளர் முத்தரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மே தினத்தை முன்னிட்டி தோழர் நல்லக்கண்ணு செங்கொடி ஏற்றி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜா, மே தினம் என்று சொல்லும்போது தமிழ்நாட்டிற்கு தனி சிறப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் சென்னையில் தான் மே தினம் முதன்முதலில் கொண்டாடபட்டது.
தற்போது இந்த நாட்டு மக்கள் எல்லாம் சுரண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயத்திற்கு எதிரான அரசாக உள்ளது. மக்கள் உருவாக்கியுள்ள நாட்டு சொத்துக்களையும், நாட்டு மக்களுக்காக வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறார்கள்.
இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையில் மத வெறியை தூண்டும் விதத்தில் தான் RSS பாஜக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை தலித் மக்களின் மீது தாக்குதலை நடத்தி வருகிறார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மாநில நலன்கள் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியா ஒரு நாடு என்றால் எல்லா மொழியும் தேசிய மொழிதான். மேலும், மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது என டி.ராஜா தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.