முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: தமிழக அரசு விளக்கம் கேட்பு!

பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: தமிழக அரசு விளக்கம் கேட்பு!

பாலியல் புகார்

பாலியல் புகார்

ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  விசாரணைக்கு பின் உரிய விளக்கத்தை  அரசுக்கு தெரிவிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது பெற்றிருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர்  மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்,  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற பின்பு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு  இரண்டு கட்டமாக நடத்துவது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது என்றும், இன்று மதியம் இறுதி முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் எனவும் தெரிவித்தார்.

பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு  தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்,  இது தொடர்பாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  விசாரணைக்கு பின் உரிய விளக்கத்தை  அரசுக்கு தெரிவிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது பெற்றிருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதிப்பட கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை. ஆனால் விரைவில் அதற்கான பணிகள் ஆன்லைன் வாயிலாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள் என தெரிவித்த அவர், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனி கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உறுதியளித்தார்.

ஜூன் 1ம் தேதிக்குள்  கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டயப்படுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த அமைச்சர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், PSBB School