சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கன
மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வழு பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, கடலூர் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரையை கடக்கும் பகுதியில் மாற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தற்போது வந்துள்ள அறிவிப்பின்படி, மகாபலிபுரத்திற்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் 5 மணி நேரத்தில் மாறக்கூடிய சூழ்நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பிற்பகல் வரை தொடர் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.