குடிபோதையில் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓட்டேரி வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவருக்கு திருமணமாகி பிரீத்தா ( வயது 41) என்ற மனைவியும், ஸ்ரீகீர்த்தி(20), கௌதம்(10) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதே போல் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா தனது கணவரிடம் இருந்து மகளை மீட்க போராடியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்து கொலை செய்தார்.. இதில் பிரதீப் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் பிரீத்தி இது குறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரதீப் சடலத்தை கைபற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவி பிரீத்தாவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.