சென்னை தரமணியில் மாநகராட்சி சார்பில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்’ முகாம் நடைபெற்றது. இதனை துவக்கி வைப்பதற்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வருகை தந்திருந்தார். நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேயர் பிரியா 9:25 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருந்தார். அப்போது துணை மேயர் வராத காரணத்தினால்
திமுக-வினர் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தனி அறையில் காக்க வைக்கப்பட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு துணை மேயர் மகேஷ்குமார் வருகை தந்தார். அதேபோல் நிகழ்ச்சி நடைபெறும் சாலையில் பொதுமக்களின் வாகனங்கள் நுழையாத வண்ணம் போக்குவரத்தினை தடை செய்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் நடுவே நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்களை அனுமதிக்காக காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், முகாம் நடைபெறும் சாலை வழியே செல்ல முயன்ற வாகன ஓட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஒருமையில் பேசி அங்கிருந்து அகற்றினர். சரியாக 10 மணியளவில் துணை மேயர் மகேஷ்குமாரின் கார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தது.
Must Read : மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
அப்போது அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸை அங்கிருந்து அகற்றி துணை மேயர் செல்ல வழிவிட்டனர். உயிர் காக்கும் அவசர வாகனத்தை சாலையின் நடுவே தடுப்பு போல் நிறுத்தி வைத்திருந்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
செய்தியாளர் : ப.வினோத்கண்ணன், இசிஆர். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.