சென்னையில் நடைபெற்று வரும் புத்தக காட்சியில் இந்த ஆண்டு 15 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
45 வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நந்தனத்தில் நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற சூழ்நிலையில் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்து சென்றதாக தெரிகிறது.
இதுவரையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் 15 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகவும் பபாசி தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க -'சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கான வானிலை எச்சரிக்கை... வெளியே செல்வோர் கவனம் தேவை
புத்தகக் காட்சி ஆண்டு தோறும் வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,அறிவுக் கருவூலமாக திகழ்வதாகவும் வாசகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்று மாலையுடன் புத்தகக்காட்சி நிறைவடைய இருப்பதால் காலை முதலே வாசகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருகிறது. தலைநகர் சென்னை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக இந்த புத்தகத் திருவிழா அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க -சென்னையில் நடைபெற்று வரும் 45-வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது...
கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தகக்காட்சி நடைபெறுவதால் லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதும் விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஒரு மிக முக்கிய காரணமாக தெரியவருகிறது. இணைய உலகம் பரந்து விரிந்தாலும் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை என்பதற்கு புத்தகக்காட்சியே சாட்சியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.