முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது’: தீக்குளித்து தற்கொலை செய்த மூதாட்டி

‘பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது’: தீக்குளித்து தற்கொலை செய்த மூதாட்டி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அடிக்கடி தனது 3 மகன்களிடமும்  நான் உங்களுக்கு பாரமாக இருப்பதாகவும்  ரோஸ் மேரி கூறி வந்துள்ளார். எனவே, தற்கொலை முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அம்பத்தூரில் முதுமை காரணமாக பெற்ற மகன்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என 72 வயது தாய் வீட்டின் உள்ளே  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அம்பத்தூர் கிழக்கு பானு நகர் புதூர் 5வது குறுக்கு தெருவில்  வசித்து வந்தவர் காலம்சென்ற சேவியர் மனைவி ரோஸ் மேரி(72).  ரோஸ்பேருக்கு ரட்சக தாஸ், ஜோசப், சாம்சன் ஆகிய மகன்களும் லூர்து மேரி என்ற பெண்ணும் உள்ளனர். இவர்கள் அனைவருமே திருமணம் ஆகி தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

கணவரின் வீட்டில் வசிந்துவரும் தாய் ரோஸ் மேரிக்கு அவரது பிள்ளைகள்தான் மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்துவந்துள்ளனர்.  அவ்வப்போது மகன்கள் வீட்டிற்கு சென்று வந்தவர் கடந்த 20 நாட்களாக அதிகமான மூட்டு வலி காரணமாக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வீட்டிலேயே அவதிப்பட்டு வந்துள்ளார்.

அடிக்கடி தனது 3 மகன்களிடமும்  நான் உங்களுக்கு பாரமாக இருப்பதாகவும்  ரோஸ் மேரி கூறி வந்துள்ளார். இந்நிலையில்,  பெற்ற மகன்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என வீட்டை உள்பக்கமாக பூட்டி  தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மூத்த மகன் ரட்சக தாஸ் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தன் பேரில் அம்பத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி  தனக்குத் தானே தீ குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பத்தூர் புதூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கன்னியப்பன்

First published:

Tags: Sucide, Tamilnadu