முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் பைக் சாகசம் - 4 பேர் கைது.. பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை என போலீஸார் எச்சரிக்கை..

சென்னையில் பைக் சாகசம் - 4 பேர் கைது.. பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை என போலீஸார் எச்சரிக்கை..

பைக் சாகசம்

பைக் சாகசம்

Bike Race in Chennai | சென்னை பெருநகர காவல் துறையினர் பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும்,பெற்றோர்களை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

  • Last Updated :

சென்னையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து  கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சட்டம்- ஒழுங்கு காவலர்கள் மற்றும் ஆயுதப்படைக்காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.க.பாலம் வரை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ECR, GST  சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து பைக் சாகசத்தில்  ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்.. ஆன்லைன் சூதாட்டத்தால் எதிர்காலத்தை தொலைத்த கல்லூரி மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி..

இந்நிலையில் கடந்த 29.04.2022 அண்ணாசாலை,  தாராப்பூர் டவர் சிக்னல் அருகே  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த இளைஞர்கள் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட தி.நகரைச் சேர்ந்த மணிகண்டன், ஹரிஹரன், ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து  இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த  சஞ்சய், அயனாவரத்தைச் சேர்ந்த ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  விலையுயர்ந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய  மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Also Read: வீட்டின் மேற்கூரை இடிந்து 8 மாத கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்

எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி   பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

First published:

Tags: Bike race, Chennai, Crime News, Police, Police arrested, Tamilnadu