45 வது
சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஜனவரி 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை 45வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த வருடம் போன்றே 800 அரங்குகள் அமைத்து இந்த புத்தக காட்சி நடைபெறும் எனவும், நுழைவு கட்டணம் பொறுத்தவரை பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளனர்.
வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: சுங்கக்கட்டண சுரண்டல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
குறிப்பாக அரங்குகளுக்கான வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்றும்,
உணவு பொருட்களின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வயிரவன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.