செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்துக்கு லீஸ் கொடுப்பது குறித்து மத்திய அரசு இன்னும் பதில் தரவில்லை என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வேளையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் செங்கல்பட்டில் இயங்காமல் இருக்கும்
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசுக்கு லீசுக்கு வழங்கினால் அதை இயக்க தனியார் பங்களிப்பாரை தமிழக அரசு கண்டறியும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை இது குறித்து மே மாத இறுதியில் நேரில் சந்தித்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு நேரடிதாக கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு பதிலளித்த மத்திய அரசு
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை நடத்த தனியார் பங்களிப்பாளரை மத்திய அரசு கண்டறியும் என தெரிவித்திருந்தது.
Also Read : குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அறக்கட்டளைக்கு 2 முறை மாநில அரசு விருது கொடுத்து கௌரவிப்பு
இந்நிலையில் இது குறித்து நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்த போது, "இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை . இரண்டு வாரங்கள் முன் டெல்லி சென்றிருந்த போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியிருந்தார்.
செங்கல்பட்டில் உள்ள
தடுப்பூசி நிறுவனத்துக்கு ஒன்பது ஆண்டுகளாக மத்திய அரசு சுமார் 700 கோடி செலவு செய்துள்ளது. ஆனால் இன்னும் அந்த நிறுவனம் இயங்க தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.