காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆரத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மழையின் நிலையை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவெளிக்கு பிறகு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மதிய இடைவெளிக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சென்னையிலும் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Heavy rain, Kanchipuram, Local News, School Leave, Weather News in Tamil