முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரவு ஊரடங்கு : சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இரவு ஊரடங்கு : சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

மாதிரி படம்.

மாதிரி படம்.

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வார நாட்களில் ( திங்கள் - சனி) ரயில் சேவை விவரம்:

1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 150 சேவைகள்

2) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி / சூலூர்பேட்டை மார்க்கம் = 64 சேவைகள்

3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 68 சேவைகள்

4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் = 152 சேவைகள் என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக் கிழமைகளில்,

1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 32 சேவைகள்

2) சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கம் = 24 சேவைகள்

3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 12 சேவைகள்

4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் = 18 சேவைகள். என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

அத்துடன், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்தில் இருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது. இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கொரோனா பரவல்: யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைப்பு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் இந்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Metro Rail, Night Curfew