காதலியை அழைத்து செல்ல பைக் வேணும்.. தந்தை மறுத்ததால் இளைஞர் தற்கொலை - செங்கல்பட்டில் விபரீதம்
காதலியை அழைத்து செல்ல பைக் வேணும்.. தந்தை மறுத்ததால் இளைஞர் தற்கொலை - செங்கல்பட்டில் விபரீதம்
செங்கல்பட்டு இளைஞர் தற்கொலை
Chengalpattu | காதலியை அழைத்துச் செல்ல இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் தூக்கு போட்டு இறந்து போன சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கன்னியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாக 19 வயதில் நாகராஜ் என்ற மகன் உள்ளார். கூலி வேலைக்கு சென்றால் தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கு நாகராஜ் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் தன் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தருமாறு கூறியுள்ளார். காதலியை அழைத்து செல்ல பைக் வேண்டும் என கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார். கன்னியப்பன் குடும்ப சூழ்நிலையை எடுத்துக்கூறி பைக் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை எனக் கூறியுள்ளார்.
பைக் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து மறைமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காதலியை அழைத்துச் செல்ல இருசக்கர வாகனம் வாங்கி தராததால் தூக்கு போட்டு இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் ( செங்கல்பட்டு)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.