தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 12:53 PM IST
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
கேரளா, கர்நாடகா மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வடக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளி காற்று வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு - கவலையளிக்கும் வகையில் ஒரு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரளா, கர்நாடகா மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வடக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளி காற்று வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு - கவலையளிக்கும் வகையில் ஒரு தகவல்