தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளை ஒட்டிய அரபிக்கடல், ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.