தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான
மழை நீடிக்கும் என்று,
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.
பீர் பாட்டிலால் காதல் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்! சென்னையில் பரபரப்பு
26, 27, 28 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் 11 சென்டி மீட்டர், வால்பாறையில் 9 சென்டி மீட்டர், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.