முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இந்த 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

weather update | திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , ராணிப்பேட்டையில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13,14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கன்னியாகுமரியிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்: வைரமுத்து

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , ராணிப்பேட்டையில் லேசான மழை பெய்யும் எனவும்

கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Heavy rain, Meteorological dept, Weather News in Tamil